கவிஞர் நரனின் உப்பு நீர் முதலை

பருத்திக்காடு பருத்தி அறுவடை முடிந்த கரிசல் வெளியில் பாடல் காட்சியொன்றின் படப்பிடிப்பு நடக்கிறது பாடல் காட்சியில் நடனமாடும் துணைநடிகையின் கால்களுக்கிடையே பூத்திருக்கிறது பருத்தியொன்று காட்சியில் அவள் நடனமாடும்போது தாள லயங்களுககு ஏற்றவாறு அப்பருத்தியும் ஆடுகிறது உணவு வேளை இடைவேளையின்போது நனைந்த பருத்தியைப் பறித்துவிட்டு வேறொன்றைப் பூக்கச் செய்கிறாள் காலிடையில் படப்பிடிப்பை முடித்துச் செல்லும் அவளோடு பெயர்ந்து செல்கிறது ஒரு பருத்திக்காடு கானகம் புத்தகத்தின் 73ம் பக்கம் கிழிக்கப்பட்டிருக்கிறது அதில் தான் தம் கரும்புரவியை மேய்ந்து வரும்படிக்கு அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன் கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான் வாசகன் குதிரையும் வீரனும் ஒருவரையொருவர் தேடி அலைகின்றனர் கிழிந்து விழுந்த கானகத்தில் உப்பளம் உப்பளத்தில் அழுதுகொண்டிருந்தாள் ஒருவன் அவள் அழுகையைப் பிரித்து பிரித்து பாத்தி கட்டிக்கொண்டிருந்தான் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்தன அவள் அழுகையை வெவ்வேறு ஊர்களுக்கு ஏற்றிச் செல்லவிருக்கும் லாரிகள் ... லாரிகள் ... முதலை நீர்த்த...