இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நரன் கவிதைகள்

படம்
தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் வீட்டைச் சுத்தப்படுத்தி குப்பைகளைத் தெருவில் வீசுகிறான் . பின் தலையைச் சொரிந்தபடி தன்னிடமே காசு வாங்கிக் கொள்கிறான் . தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் தெருவைச் சுத்தப்படுத்தி குப்பைகளை . நகரத்தின் வெளியே கொண்டுபோய் வீசுகிறான் நகரத்தில் நோய்த் தொற்று அதிகம் . கொசு மருந்து அடிக்க தன்னிடமே ஒப்புதல் வாங்கிக் கொள்கிறான் . தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி பின் நகரைச் சுத்தம் செய்து கப்பலிலேற்றி அருகிருக்கும் நாட்டில் கொண்டு போய்க் கொட்டுகிறான் . அதற்குத் தானே டெண்டர் விட்டுத் தானே டெண்டர் எடுத்துக் கொள்கிறான். *** ஒரு காட்டு மரம் அது தன்னைத் தானே விதைக்கும். தனக்குத் தானே நீரூற்றித் தன்னைத் தானே வளர்க்கும். வேனலில் தனக்குத் தானே காற்றை வீசிக் கொண்டு உறங்கும் . கடும் புயலின் நாளில் தீராத மன உளைச்சலில் தன் கரங்களை ,சிரசை , சமயங்களில் தன் மொத்த உடலையே வெட்டிக் கொண்டு சரியும் . எப்போதாவது தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு கருகும் . தனக்குத் தானே நாற்காலி செய்து போட்டுக் கொண்டு அதில் உட்கார்ந்திருக்கும் . ...

கவிஞர் நரனின் உப்பு நீர் முதலை

படம்
பருத்திக்காடு பருத்தி அறுவடை முடிந்த கரிசல் வெளியில் பாடல் காட்சியொன்றின் படப்பிடிப்பு நடக்கிறது பாடல் காட்சியில் நடனமாடும் துணைநடிகையின் கால்களுக்கிடையே பூத்திருக்கிறது பருத்தியொன்று காட்சியில் அவள் நடனமாடும்போது தாள லயங்களுககு ஏற்றவாறு அப்பருத்தியும் ஆடுகிறது உணவு வேளை இடைவேளையின்போது நனைந்த பருத்தியைப் பறித்துவிட்டு வேறொன்றைப் பூக்கச் செய்கிறாள் காலிடையில் படப்பிடிப்பை முடித்துச் செல்லும் அவளோடு பெயர்ந்து செல்கிறது ஒரு பருத்திக்காடு கானகம் புத்தகத்தின் 73ம் பக்கம் கிழிக்கப்பட்டிருக்கிறது அதில் தான் தம் கரும்புரவியை மேய்ந்து வரும்படிக்கு அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன் கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான் வாசகன் குதிரையும் வீரனும் ஒருவரையொருவர் தேடி அலைகின்றனர் கிழிந்து விழுந்த கானகத்தில் உப்பளம் உப்பளத்தில் அழுதுகொண்டிருந்தாள் ஒருவன் அவள் அழுகையைப் பிரித்து பிரித்து பாத்தி கட்டிக்கொண்டிருந்தான் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்தன அவள் அழுகையை வெவ்வேறு ஊர்களுக்கு ஏற்றிச் செல்லவிருக்கும் லாரிகள் ... லாரிகள் ... முதலை நீர்த்த...