பொறாமை

பொறாமை  கத்தியைத் தூக்கிக் கொண்டு
என்னோடு சண்டையிட  வந்தது.
நான் அதனோடு  நடனமிட்டேன்

அது வனமிருகத்தின்  வாயால்
அர்த்தமற்ற  சொற்களை  பீய்ச்சியடித்தது
நான் அதனுடன்
நிதானமாக உரையாடினேன்

அது  தன்  தலையால்
என் நெஞ்சை உடைக்க வந்தது
நான் சற்றே விலகிக் கொண்டேன்

என்  இதழ்க்கடை மலர்  கண்டு
அதன்  சித்தம் கலங்கி விட்டது

கடைசியில் 
ஒரு மல்லன் 
தன் புயவலியைக்  காட்டுவதைப் போலே,
பொறாமை 
சட்டையைக் கழற்றி  எறிந்து விட்டு 
அதன்  ஏக்கங்களைக்  காட்டிக் கொண்டு  நின்றது.
அது கண்டு
நான் காலொடு மண்டு விட்டேன்.

- கவிஞர் இசை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்

நரன் கவிதைகள்